குவைத் ஏர்போர்ட் தாக்குதல்.. அமெரிக்காவின் தவறு! ஈரான் பரபர குற்றச்சாட்டு.. மறுக்கும் டிரம்ப்!

குவைத்: குவைத் ஏர்போர்ட் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய ஒருவர் உயிரிழந்தார். ஆனால், இந்த தாக்குதல் முழுக்க முழுக்க அமெரிக்காவின் தவறு என்றும், அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்பு தவறுதலாக ஏர்போர்ட்டை தாக்கிவிட்டது என்றும் ஈரான் குற்றம் சாட்டியிருக்கிறது. இதனை அமெரிக்கா மறுத்துள்ளது.

குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு சேதம் ஏற்பட்டதற்கு அமெரிக்காவின் ஏவுகணைத் தடுப்பு அமைப்பே காரணம் என்ற ஈரானிய கூற்றை அமெரிக்கப் படைத்துறை புதன்கிழமை முற்றிலும் மறுத்துள்ளது. அந்த சேதம் ஈரான் திட்டமிட்டு நடத்திய ட்ரோன் தாக்குதலின் விளைவு என்றும் கூறியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *